உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள்: போதாது என்கிறார் டெலிகிராம் நிறுவனர்

விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள்: போதாது என்கிறார் டெலிகிராம் நிறுவனர்

மாஸ்கோ: 'டெலிகிராம்' சமூக வலைதள நிறுவனரான பாவெல் துரோவ், இளம் பெண்கள் தன் விந்தணுவைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றால், முழு மருத்துவ செலவை ஏற்பதுடன், சொத்திலும் பங்கு தருவதாக அறிவித்துள்ளார்.ரஷ்யாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ், 41. இவரது சொத்து மதிப்பு, 1.52 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. துரோவுக்கு மூன்று மனைவியர் மூலம் ஆறு குழந்தைகள் உள்ளன.இது தவிர, விந்தணு தானம் செய்ததன் மூலம், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து குழந்தைகளுக்கும் தன் சொத்தில் சம பங்கு கிடைக்கும் என்றும் பாவெல் துரோவ் அறிவித்துள்ளார்.இந்த நிலையில், குழந்தை பிறப்பை அதிகரிக்க புதிய அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.அதன்படி தன் விந்தணுவை பயன்படுத்தி, குழந்தை பெறும், 37 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான, முழு மருத்துவ செலவையும் தானே ஏற்பதாக அவர் அறிவித்துள்ளார்.உலக அளவில் ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருவதால், சமூகப் பொறுப்பாக எடுத்துக்கொண்டு இத்தானத்தை துவங்கியதாக துரோவ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nagercoil Suresh
டிச 26, 2025 05:20

இவர் என்ன செய்தாலும் இன்னும் 200-300 ஆண்டுகளில் மக்கள் தொகை தற்போதய நிலையில் இருந்து பாதியாக குறைந்துவிடும் ...


Mani . V
டிச 26, 2025 05:14

ன்னுடைய விந்தணு எத்தனை பேருக்கு, யார் யாருக்கு கொடுக்கப்பட்டது? என்பதை வெளியிடக்கூடாது என்னும் பொழுது, நூறு பேருக்கு கொடுக்கப்பட்டது என்று சொல்கிறார் என்றால், தனிமனித ரகசியம் காக்கப்படவில்லை என்றுதானே அர்த்தம்?.


தாமரை மலர்கிறது
டிச 26, 2025 02:51

பல் இருக்கிறவன் பக்கோடா சாப்றான் .


சமீபத்திய செய்தி