உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 60 லட்சத்தை கடந்தது சிங்கப்பூர் மக்கள் தொகை!

60 லட்சத்தை கடந்தது சிங்கப்பூர் மக்கள் தொகை!

சிங்கப்பூர் சிட்டி: சிங்கப்பூர் நாட்டின் மக்கள் தொகை 60 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், மக்கள் தொகை உயர்வு 2 சதவீதம் உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அரசு அறிக்யைில் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், சிறு நகரம் மட்டுமே. மலாய், தமிழ், சீனம், ஆங்கிலம் ஆகியவை பேசக்கூடிய மக்கள் வசிக்கின்றனர்.நாட்டின் மொத்த மக்கள் தொகை 734 சதுர கிலோமீட்டர். இங்கு வசிக்கும் மக்கள் தொகை பற்றிய புள்ளி விபரத்தை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டது. அதன்படி 2024 ஜூன் மாதத்தில் சிங்கப்பூரில் 60 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் சிங்கப்பூர் வாழ் குடியுரிமை பெற்றவர்கள், 41 லட்சம் பேர். சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு பணியாளர்கள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் உள்ளிட்டவர்கள் 18 லட்சத்து 60 ஆயிரம் பேர்.குடியுரிமை இல்லாதவர்கள் மட்டும் 5 சதவீதம் பேர் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 2030ம் ஆண்டில் சிங்கப்பூர் மொத்த மக்கள் தொகை, 69 லட்சமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பெரிய குத்தூசி
செப் 26, 2024 21:14

அமெரிக்கா பொருளாதார ஏற்ற தாழ்வை பொறுத்தே சிங்கப்பூரில் பொருளாதாரம் அமையும் . கோவிட் நோய் ஆரம்பித்த 2019 முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி சுமார் 1 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு மேல் வேலையில்லாமல் சிரமப்படுகின்றனர். நிறைய இந்தியர்கள் வேலை இழந்து இந்தியா திருப்பிவிட்டார்கள். கடுமையான பொருளாதாரத்தில் சிக்கியுள்ள ஐரோப்பாவில் மக்கள் மூன்று வேலை உணவை தவிர்த்து 2 வேலை மட்டுமே சாப்பிடுகிறார்கள், அந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்து உணவு பொருட்களின் விலை விண்ணை தொடுகிறது. சிங்கப்பூரில் கட்டமைப்பில் சீனாவின் பங்கு முக்கியமானது. அமெரிக்கா பொருளாதாரம் கைகொடுக்காததால் சீனாவின் முதலீடுகளை நம்பியே உள்ளது. ஆதலால் இந்தியர்கள் இருக்கும் வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூர், ஐரோப்பா , அமரிக்கா போகலாம் என கனவு காணாதீர்கள். வெளிநாடுகளின் ஜொலிப்பு முடிந்துவிட்டது. பணம் இருந்தால் 10 நாட்களுக்கு சுற்றுலா வாசியாக சென்று வாருங்கள். இப்போதும் எதிர்காலத்திலும் இந்தியா மட்டுமே தனித்துவமான பொருளாதாரத்தில் வெற்றிநடை போடுகிறது. இந்த நேரத்தில் ஒவொருவரும் பிரிவினசக்தியை கண்டறிந்து இந்தியர் என்ற பிணைப்புடன் ஒற்றுமையாக வாழ்வோம். ஜைஹிந்த்


புதிய வீடியோ