உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முடிவுக்கு வருது போர்... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிணைக்கைதிகளின் பட்டியல் பரிமாற்றம்

முடிவுக்கு வருது போர்... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிணைக்கைதிகளின் பட்டியல் பரிமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பினரும் பரிமாறிக் கொண்டனர்.கடந்த 2023ம் ஆண்டு அக்.,7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து சென்றனர். இதில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது 48 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர். ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரையில், 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை நிறுத்துவதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக் கொண்ட நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. போர் நிறுத்தத்திற்காக அதிபர் டிரம்ப் 20 நிபந்தனைகள் அடங்கிய அமைதித் திட்டத்தை முன்மொழிந்தார். இதில் உள்ள ஒரு சில அம்சங்களை ஏற்க ஹமாஸ் மறுப்பு தெரிவித்த நிலையில், பின்னர் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயார் என்று அறிவித்துள்ளது. கடந்த அக்.,6ம் தேதி எகிப்தின் ஷர்ம் எல் ஷெயிக் நகரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மூலோபாய விவகாரங்கள் அமைச்சர் ரோன் டெர்மர் இன்று கலந்து கொள்ள இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நேற்றுடன் (அக்.,7) 2 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பினரும் பரிமாறிக் கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பிணைக்கைதிகளை விடுவிப்பதுடன், காசாவில் உள்ள இஸ்ரேல் படைகளை முழுவதும் வெளியேற்ற வேண்டும் என்று பாலஸ்தீன ஆயுதக் குழு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Valagam Raghunathan
அக் 09, 2025 06:17

நம் முதல்வர் இதை முன்பே செய்து இருக்கலாம். டிரம்பின் கூட நம் முதல்வருக்கும் நோபல் பரிசு வழங்க வேண்டும்.


Rajasekar Jayaraman
அக் 09, 2025 00:32

போர் முடிவுக்கு வருவது தெரிந்து தான் கலைஞர் கருணாநிதி நாலு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததைப் போல் திராவிட கம்யூனிஸ்ட் மற்றும் இந்தி கூட்டணி மாய்மாலம் செய்கிறதா பிறகு ட்ரம்பை போல எங்கள் போராட்டத்துக்கு பயந்து தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமைதிக்கான நோபல் பரிசை கூட கேட்கலாம்.


தாமரை மலர்கிறது
அக் 08, 2025 23:23

அரபு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு புகுந்த ஹமாஸ் அமைப்பினர் அனைவரும் அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பினால் இஸ்ரேல் அமைதி பூங்காவாக மாறும்.


Anand
அக் 08, 2025 19:18

மாடல் ஆட்சி சாதனையில் மேலும் பத்து மைல்கல்.


ஆரூர் ரங்
அக் 08, 2025 18:50

ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றப் போவது தெரிந்து சமாதான வழிக்கு மாறிவிட்டனர் ன்னு நினைக்கிறேன்.


Balasubramanian
அக் 08, 2025 17:43

நாளை உலக சமாதான நோபல் பரிசு அறிவிப்பு! பரிசு யாருக்கு? கேட்டு வாங்கியவருக்கு!


Ravi
அக் 08, 2025 17:41

தமிழக சட்டசபையில் தீர்மானம் என்றவுடன் இஸ்ரேல் , ஹமாஸ் இரண்டு பேருமே இறங்கி வந்து விட்டனர். போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகி உள்ளது. உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசு நம் முதல்வருக்குத்தான் கிடைக்கும் என நம்புவோம்.