உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / என்னை துாக்கில் போட முயற்சி நடந்தது: மார்க் ஜூக்கர்பெர்க்

என்னை துாக்கில் போட முயற்சி நடந்தது: மார்க் ஜூக்கர்பெர்க்

கலிபோர்னியா : 'பேஸ்புக்கில் யாரோ ஒருவர் நபிகள் நாயகத்தை ஓவியமாக வரைந்ததற்காக பாகிஸ்தானில் சிலர் என்னை துாக்கில் போட முயற்சித்தனர்' என, 'மெட்டா' தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் கூறினார்.சமூக வலைதளமான பேஸ்புக், உலகின் பெரும்பாலான நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கேற்ப பேஸ்புக்கிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.அவற்றுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் பேஸ்புக்கிற்கு உள்ளது. இதில் உள்ள சவால்கள் குறித்து, அதன் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தன் சமீபத்திய நேர்காணலில் பேசியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது: நாம் ஏற்காத சட்டங்கள் வெவ்வேறு நாடுகளில் உள்ளன. உதாரணமாக, முகமது நபியின் ஓவியத்தை பேஸ்புக்கில் யாரோ ஒருவர் வரைந்ததற்காக பாகிஸ்தானில் சிலர் எனக்கு மரண தண்டனை விதிக்க முயன்றனர். அது அவர்களின் கலாசாரத்தில் மதத்தை அவமதிக்கும் செயல் என்று கூறினர்.இதற்காக என் மீது வழக்கு பதிந்து கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடங்கினர். நான் பாகிஸ்தானுக்குச் செல்லப் போவதில்லை. அதனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. உலகில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நாடுகள் இன்னும் உள்ளன. வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைப் பாதுகாக்க அமெரிக்க அரசு உதவ வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை