உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை; ஆக்ஸ்போர்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை; ஆக்ஸ்போர்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ''வளமான தமிழகமாக நமது மாநிலம் வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்க கூடிய மாநிலமாக உயர்ந்து இருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை,'' என லண்டனில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.லண்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்போர்டு பல்கலை அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஈவெரா உருவப்படத்தை திறந்து வைத்தார். அவர் பேசியதாவது: பல நூற்றாண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலை அரங்கத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்க நான் தமிழக முதல்வர், தெற்காசியாவில் அரசியலை புரட்டி போட்ட இயக்கமான திமுக இயக்கதின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல, ஈவெராவின் பேரன் என்கிற கம்பீரத்துடன் உங்கள் முன் வந்து இருக்கிறேன்.

முன்னேற்றம்

ஈவெராவின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலையில் திறந்து வைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் திமுகவின் தலைவர் பொறுப்பில் இருக்கும் எனக்கு, இதை விட பெருமை ஏதுவும் என்னால் இருக்க முடியாது. இந்த ஐரோப்பிய பயணத்தில் பார்த்தது, ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறி வந்து, ஏராளமான பேர் இங்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள்.தமிழகம் எல்லாவற்றிலும் முன்னேறி வருகிறது.

சாதனை

கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வாழ்க்கை தரம், உள்கட்டமைப்பு வசதியில் முன்னேறி இருக்கிறோம், உலகத்தின் சாதனை உற்பத்தி சாதனையாக மாறி இருக்கிறது. பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. வளமான தமிழகமாக வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்க கூடிய மாநிலமாக உயர்ந்து இருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

எஸ் எஸ்
செப் 05, 2025 08:43

கூட்டம் முடிந்தவுடன் படம் அகற்றப்படும் என்று அனைவருக்கும் தெரியும்


பாரத புதல்வன்
செப் 05, 2025 08:31

தமிழகத்தில் தீ மு க வின் சாதனைகள்: 1.சாராயம் விற்பதில் முதலிடம். 2.கள்ள சாராயம் குடித்து சாவுகள் அதிகம் உள்ள மாநிலம். 3.இளம் விதவைகளை உருவாக்குவதில் முதலிடம். 4.ஊழலில் முதலிடம். 5.இந்து மதத்தை ஏளனம் செய்து, கோவில் வருமானத்தை கொள்ளை அடிப்பதில் முதலிடம். 6.மோசமான கல்வி கொள்கையில் முதலிடம். 7.வெற்று விளம்பரம் செய்வதில் முதலிடம். 8.இரண்டு வரி தகவல் கூட துண்டு சீட்டு பார்த்து படிப்பதில் முதலிடம். 9.கனிம வளங்களை கொள்ளை அடித்தல், நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து செய்வதில் முதலிடம். 10.ஆட்சியில் உள்ள அமைச்சர்களே ஆபாசமாக பேசுவதில் முதலிடம். இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.... அப்பாவின் சாதனைகளை.... ஆக்ஸ் போர்டு அசந்து விடும்....


Kumar Kumzi
செப் 05, 2025 08:31

ஹாஹாஹா உலகப்புகழ் ஓங்கோல் காமெடி கிங் ஆக்ஸ்போர்ட்டில் மக்களை சிரிக்க வைத்து சாதனை பண்ணிட்டாருயா


ராஜ்
செப் 05, 2025 08:27

நீ கேளேன் நீ கேளேன் என்ற கருணாஸ் காமெடி தான் நினைவுக்கு வருகிறது


Murugesan
செப் 05, 2025 08:22

சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தை செலவு செய்ய வக்கற்ற பிறவிகள்


shyamnats
செப் 05, 2025 08:20

அப்படியே 23 ம் பக்கத்தையும் பெரிதாக frame பண்ணி மாட்டி உலகிற்கு சொல்லியிருக்கலாம்.


mohanamurugan
செப் 05, 2025 08:17

கிரேக் செயலி வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெரியார் என அழைக்கப்படும் ஈ.வி. ராமசாமி அவர்களின் உருவப்படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 4, 2025 அன்று திறந்து வைத்தார். இது பெரியார் 1925-ல் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்றது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களின் உலகளாவிய தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், "சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் பாரம்பரியங்கள் மாநாடு 2025" என்ற நிகழ்வை ........


தியாகு
செப் 05, 2025 08:56

அட பேக்கு, வெறும் முப்பதாயிரம் ரூபாய் வாடகை பணம் கொடுத்தால் அங்கே உன் தாத்தா போட்டோவை கூட திறந்து வைக்கலாம். இதுகூட உனக்கு தெரியாமல் இருப்பதால்தான் கட்டுமர திருட்டு திமுக இன்னமும் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். முரசொலியை மட்டும் படிக்க வேண்டாம். வெளிஉலகையும் கொஞ்சம் தெரிந்துகொள்.


krishnamurthy
செப் 05, 2025 08:14

முதலில் திராவிடம் என்றால் என்ன


hariharan
செப் 05, 2025 08:10

Are they not ashamed to stage a drama like this. Nothing official about it from "OXFORD UNIVERSITY". They have rented a hall and ing anybody photo and do even any rituals no body bothered. It is just like renting KALYANA MANDAPAM and doing function. already people knows your dramas like unesco award, viakom veerar award. Gandhis books and sabarmathi ashram is nationalized. If thie EVR is so great why not nationalize his property and books. Barathiyar works where nationalized because he was true leader.


ஈசன்
செப் 05, 2025 08:06

நம் முதல்வர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலை அரங்கில் தமிழ் நாட்டின் முன்னேற்றம் பற்றிய பேசியது தமிழகத்திற்கு பெருமை. சபாஷ்...


Kumar Kumzi
செப் 05, 2025 08:24

அதுசரி என்ன பாஷையில் பேசுனாரு காமெடி கிங்


முக்கிய வீடியோ