உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நான் தான் செய்தேன்: மீண்டும் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி டிரம்ப் பேச்சு!

நான் தான் செய்தேன்: மீண்டும் வர்த்தகத்தை மேற்கோள் காட்டி டிரம்ப் பேச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''இந்தியா - பாக்., போரை வர்த்தக டீலிங் மூலம் முடித்தேன் என நினைக்கிறேன்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான வெள்ளை மாளிகை சந்திப்பின் போது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் நிறுத்தம் தொடர்பாக பேசியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9m0exvir&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் அதிபர் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் என்ன செய்தோம் என்று தெரியும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க நான் உதவினேன். நான் அதை வர்த்தகம் மூலம் தீர்த்து வைத்தேன். இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தராக இருந்தேன். வர்த்தகம் மற்றும் ராஜதந்திரம் மூலம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை உருவாக்கினேன்.அமெரிக்கா இரு நாடுகளுடனும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்கிறது. பாகிஸ்தானுக்கு சில சிறந்த மனிதர்களும், சிறந்த தலைவர்களும் கிடைத்துள்ளனர். இந்தியா எனது நண்பர். பிரதமர் மோடி ஒரு சிறந்த தலைவர். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படுவதை நிறுத்திவிட்டேன் என டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். ஆனால், பாகிஸ்தான் கெஞ்சியதால் மட்டுமே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. டிரம்ப் கூறுவதை இந்தியா நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

venugopal s
மே 22, 2025 15:22

நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், சண்டை போடு என்றால் போடுவார்கள், நிறுத்து என்றால் நிறுத்தி விடுவார்கள் என்று மட்டும் தான் சொல்லவில்லை. ஆமாம் நமது மத்திய பாஜக அரசு ஏன் இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் செய்வதில்லை ?


SUBBU,MADURAI
மே 22, 2025 12:23

கட்டுமர கருணாநிதி மெரினா பீச்சில் மனைவி இணைவியோடு சேர்ந்து எப்படி ரெண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து இலங்கையில போரை நிறுத்தினாரோ, அதே மாதிரி வியாபாரத்தை நிறுத்திருவேன்னு மிரட்டியே போரை நிறுத்திட்டாராம் நம்ம ட்ரம்ப் அங்கிள். ஆக மொத்தம் அமெரிக்க அதிபருக்கே வழிகாட்டிடா எங்க தானைத் தலைவன் கட்டுமர கருணாநிதி.


Rengaraj
மே 22, 2025 11:39

எல்லா ஊரிலும் ரெண்டு விவகாரமான பயபுள்ளைகள் இருப்பாங்கல்ல இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு காரணம் யார், உண்மையான காரணம் என்ன என்பது அங்கே ட்ரம்பை பிடிக்காதவர்கள் மூலம் வெகுசீக்கிரம் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுவிடும் .


Balasubramanian
மே 22, 2025 11:19

வானத்தில் நிலவு தோன்றவும் சூரியன் அஸ்தமனம்


shyamnats
மே 22, 2025 11:07

அமெரிக்காவின் விடியலார், எல்லாவற்றிலும் ஸ்டிக்கர் ஓட்ட முயற்சிக்கிறார். அவர்களுடைய அடி மடியில் பாக்கில் US இன் அணுஆயுத சேமிப்பில் கைவைத்து US ஐ, expose செய்வதை மூடி மறைக்க இவ்வளவு ஆட்டம். இவர் மிரட்டுவது போல் இந்தியர்களை வெளியேற்றி தான் பார்க்கட்டுமே. அமெரிக்கா தள்ளாடி விடும்.


Rajarajan
மே 22, 2025 10:44

எல்லாரும் நல்ல பாத்துக்கோங்க. நானும் பெரிய ரவுடி தான்.


Narayanan
மே 22, 2025 10:11

டிரம்ப் வந்ததில் இருந்து எது நடந்தாலும் நமது ஸ்டாலின் மாதிரி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார் . என்னால்தான் , நான்தான் என்று. நாளை தேர்தல் அமெரிக்காவில் தேர்தல் நடந்தால் டிரம்ப் தோற்பது உறுதி . தனது ஆட்களை விட்டே தன் மீது துப்பாக்கி சூட்டை நடத்திக்கொண்டு அனுதாப ஓட்டுக்களை பெற்று ஆட்சியில் இருக்கிறார் . வியாபார தந்திரத்தை பயன்படுத்துகிறார் . நல்லது இல்லை .


R. SUKUMAR CHEZHIAN
மே 22, 2025 09:53

பாரதம் பாகிஸ்தானை உதைக்காமல் விட்டால் அமெரிக்க சந்தையை பாரததிற்கு திறந்து விட்டு இறக்குமதி வரியையும் முற்றிலுமாக நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேள்வி.


hariharan
மே 22, 2025 09:35

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் அமைதியை உருவாக்கினேன் என்று சொல்கிறார்.


ஆரூர் ரங்
மே 22, 2025 09:33

இவரது சொந்த நாட்டில் அன்றாடம் நடக்கும் துப்பாக்கி சூடுகளைத் தடுக்கவே துப்பில்லை.


சமீபத்திய செய்தி