உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யாவின் மிகப்பெரிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: இவை மிகப்பெரிய தடைகள். அவர்களின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நீண்ட நாட்கள் நீடிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். போர் விரைவில் தீர்க்கப்படும், என்றார்.அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' நிரந்தர அமைதி ரஷ்யாவை பொறுத்தது. இன்றைய நடவடிக்கைகள் ரஷ்யாவின் எரிசக்தி துறைகள் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா தொடர்ந்து ராஜதந்திர தீர்வை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது. நிரந்தர அமைதி முற்றிலும் ரஷ்யாவின் நல்லெண்ண பேச்சுவார்த்தையை பொறுத்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

kalyanasundaram
அக் 23, 2025 17:05

he is a papooo of america never knows opponents power


djivagane
அக் 23, 2025 11:54

இப்பொழுதுதான் ரஷ்யா எண்ணெய் நிறுவனம் மீது தடை விதிக்கிறதா அமெரிக்கா .அமெரிக்கா உரேனியும் ரஷ்யா விடம் இன்னும் வாங்குகிறது அமெரிக்கா அதெற்கு வரிகிடயாது


venkat
அக் 23, 2025 11:29

அமெரிக்காவின் நரித்தனம் வெளியே நன்றாக தெரிகிறது இந்த டிரம்பினால்.. இந்தியாவை மட்டுமல்ல, பிற நாடுகளையும் தங்களது நரித்தனத்தால் அழிக்கும் அமெரிக்காவின் கெட்ட எண்ணங்கள் நன்றாக பொது மக்களுக்கு புரிகிறது..


மணியன்
அக் 23, 2025 10:45

ட்ரம்பின்(U.S) எஜமான் தோரனையெல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிந்து விட்டார் மாவீரன் புடின்.


Anand
அக் 23, 2025 10:29

ஆனால் இவர் மட்டும் ஆயுத ஏற்றுமதி, சதித்திட்டம் போன்றவற்றை நிறுத்தமாட்டார். இவருக்கு இவரே ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.


அப்பாவி
அக் 23, 2025 10:08

ஆயில் விலையில் அதிரடி தள்ளுபடி ஆஃபர். 90 பர்சண்ட் தள்ளுபடி நமக்கு கிடைக்கப் போகுது..


vivek
அக் 23, 2025 11:39

ஓசி ....


Senthoora
அக் 23, 2025 08:55

சில தாதாக்கள், ரொம்ப மிரட்டுவாங்க, யார்டா அவன் என்று, ஆனால் ஓங்கி எவண்டா அவன் சும்மா கத்துறது என்று கத்திநால் , அந்த தாதா ஓடிடுவான், அதுதான் டிரம்ப்.


Palanisamy Sekar
அக் 23, 2025 08:22

இந்த தடைகளை மீறி இந்த எண்ணெய் நிர்வனங்கள் தங்கள் வியாபார உத்தியை அமெரிக்க தவிர பிற நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். இந்தியாவை மிரட்டி பார்த்தார் ட்ரம்ப். ஆனால் மோடியை போன்ற தலைவரிடம் அது செல்லுபடியாகவில்லை. அதேபோன்றுதான் எண்ணெய் நிறுவன தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மோடியை பார்த்து பாடம் கற்றுக்கொண்டு இந்த தடைகளை உடைத்தெறிய வேண்டும். அமெரிக்க மட்டுமே உலகம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.


duruvasar
அக் 23, 2025 08:05

மிரட்டுவது, கையை முறுக்குவது என்பதற்கு ரௌடிசம் என்று பெயர். ராஜதந்திரம் எனது பெயர் இல்லை.


R Dhasarathan
அக் 23, 2025 07:31

இதற்கு ஒரு எல்லையே இல்லையா. இவர்களுக்கு யார் பாடம் கற்பிப்பது....