உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா வீசிய பங்கர் பஸ்டர் குண்டு!

ஈரான் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா வீசிய பங்கர் பஸ்டர் குண்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா இதுவரை பயன்படுத்தப்படாத ஜி.பி.யூ-57 பதுங்கு குழி அழிக்கும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது என்பது தெரியவந்தது.இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கிடையே 10 நாட்களாக போர் நடந்து வருகிறது. தற்போது ஈரானின் நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ''ஈரான் மீதான தாக்குதலில் வெற்றி அடைந்துள்ளோம். ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்'' என நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.இந்நிலையில், தாக்குதல் நடத்த அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, உலகில் இதுவரை எங்கும் பயன்படுத்தப்படாத ஜி.பி.யூ-57 எனப்படும் பதுங்கு குழி அழிக்கும் குண்டுகளை (பங்கர் பஸ்டர்) வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானின் பார்டோ அணு சக்தி மையம், மலையை குடைந்து 80 முதல் 90 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தான், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பாதுகாத்து வருவதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையினர் கண்டறிந்தனர். அந்த மையத்தை அழிக்க வேண்டுமெனில், அமெரிக்காவின் அடி ஆழம் வரை துளைத்துக்கொண்டு சென்று பதுங்கு குழிகளை அழிக்கும் 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் போட்டால் மட்டுமே முடியும் என்றும் உளவுத்துறையினர் கூறி வந்தனர். அதன்படி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.இந்த பங்கர் பஸ்டர் குண்டுகளை, பி-2 என பெயரிடப்பட்ட அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பி-2 குண்டுவீச்சு விமானமும், தலா இரண்டு ஜி.பி.யூ-57 பங்கர் பஸ்டர் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த குண்டுகள் ஒவ்வொன்றும் 30,000 பவுண்டுகள் (13.6 டன்) எடை கொண்டவை.இந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும் இடம், முற்றிலும் மண்ணோடு மண்ணாகி விடும் என்று அமெரிக்க ராணுவத்தினர் கூறியுள்ளனர். எனினும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்களை ஈரான் அரசு முழுமையாக வெளியிடவில்லை. பார்டோ அணு சக்தி மையத்தின் நுழைவாயில் மற்றும் பின்புற கேட்டுகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளதாக, அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

மூர்க்கன்
ஜூன் 22, 2025 23:56

முன்னாலேயே நகர்த்தி விட்டார்கள்... நிச்சயம் அணுகுண்டு தயாரித்து அதனை பயன்படுத்துவார்கள் அதனை தாமதப்படுத்த முடியுமே தவிர தடுக்க முடியாது?? அணுகுன்டு பயன்படுத்தி ஜப்பானை அழித்து வல்லரசாக காட்டி கொண்ட அமெரிக்காவிற்கு அந்த கர்மா பூமராங்காக பல மடங்கு திரும்பி வருமென்பதை நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்.


Rathna
ஜூன் 22, 2025 18:51

அமெரிக்காவின் பெரியண்ணதனம் நமக்கு தெரிந்தாலும், ஈரானும் பாகிஸ்தானும் மூர்க்க காட்டேரிகளின் கையில் உள்ளது. இவர்களால் நாகரீக உலகத்திற்கு மிக பெரிய ஆபத்து உள்ளது. அவர்கள் உலகில் அமைதியை விரும்புபவர்களின் உயிரை, மதத்தின் காரணமாக அழிக்க தயாராக உள்ளனர்.


அமெரிக்கன்
ஜூன் 22, 2025 17:08

உடாதீங்க ட்ரம்ப். நோபல் பரிசு உங்களுக்கு கிடைக்கும் வரை குண்டு வீசுங்க. முடிஞ்சா ஸ்வீடன் மேலேயும் ஒண்ணு வீசுங்க. நாலு நோபல் பரிசு குடுப்பாய்ங்க


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 16:26

கடைசியில் ஈரானில் மனிதர்களே இல்லை , அமேரிக்கா கொன்றால் அதற்க்கு யாரும் கேள்வியே கேட்கக்கூடாது ? போங்கடா நீங்களும் உங்க ஐநாவும் , ஆகாதா பொண்டாட்டி கைபட்டா குத்தம் கால்பட்டா குத்தம் என்றொரு சொலவடை நினைவுக்கு வருது


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 15:02

கடைசியில் வெடித்த குண்டு நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் பதுக்கி இருந்த அணுகுண்டை வெடிக்க வைத்து விட்டார்கள் அல்லது உலை வெடித்து விட்டது...


Murthy
ஜூன் 22, 2025 14:47

இதேபோல் இசுரேலில் உள்ள அணுசக்தி உலையை ஈரானும் தாக்கினால் உலகம் ஏற்றுக்கொள்ளுமா ?? இசுரேலில் எல்லாம் வெளியேதான் இருக்கு


பெரிய ராசு
ஜூன் 22, 2025 14:21

பங்காளி பங்கேற்றுவிட்டார், தெரிந்துதான் இஸ்ரயேல் ஆட்டத்தை தொடங்கியது , பெரியண்ணன் ஆட்டத்தை முடித்து வைப்பார்


மூர்க்கன்
ஜூன் 22, 2025 23:57

பெரியண்ணனின் அப்பனும் இந்த உலகத்தில பிறந்து இருப்பான்ல ?


பெரிய ராசு
ஜூன் 23, 2025 17:55

யாருன்னு சொல்லுலே ....பெரியண்ணனுக்கு நிகர் அவனே தான் ...செப்டம்பர் 11 தினம் தெர்யுமா அதுக்கப்பறம் ஒரு மூர்க்கன் அமெரிக்காவிற்கு எதிரே பேசமுடியாது ....


SANKAR
ஜூன் 22, 2025 13:27

US sources say this bombs can penetrate 60 MTRS od unspecified mixed earth or 18 MTRS of reinforced concrete.But Fordow is 80 to 90 MTRS BELOW a mountain....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 22, 2025 14:21

அதனால்தான் ஒவ்வொரு அணு உலையிலும் 4 குண்டுகள் போடப்பட்டன. முதல் குண்டு 40-50 மீட்டர் ஆழம் சென்று வெடித்தபின் அடுத்த குண்டு மேலும் ஒரு 20-30 மீட்டர் ஆழம் சென்று வெடிக்கும். கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும். இந்த சின்ன விஷயம்கூட அவங்க கவனிக்காமலா இருப்பாங்க?


Ambedkumar
ஜூன் 22, 2025 18:56

According to news reports, multiple areas across Iran felt seismic activity yesterday evening, potentially linked to explosions at the Fordow nuclear facility


Raja k
ஜூன் 22, 2025 12:59

அது பெயர் பங்கர் குண்டு இல்லை, டிவிட்டர் பஸ்டர் குண்டு,,,


Senthoora
ஜூன் 22, 2025 15:26

அப்போ சிங்கப்பூரில் இருக்கும் அணுவிஞ்ஞானி காசிமணி சொல்வது பொய்யா?


சமீபத்திய செய்தி