உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதிகளை சிறப்பாக ஒடுக்குகிறது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நற்சான்று

பயங்கரவாதிகளை சிறப்பாக ஒடுக்குகிறது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நற்சான்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா நற்சான்று வழங்கியுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக பாகிஸ்தான் - அமெரிக்கா பிரதிநிதிகள் இடையே இரு தரப்பு பேச்சு நேற்று முன்தினம் இஸ்லாமாபாதில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் சிறப்பு செயலர் நபீல் முனீர் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை பிரிவின் ஒருங்கிணைப் பாளர் ஜார்ஜ் லோஜெர்போ தலைமை தாங்கினர். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அங்கீகரித்த நிலையில் இந்த கூட்டம் நடந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க இரு நாடுகளும் உறுதியுடன் உள்ளன. பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், ஐ.எஸ்.ஐ.எஸ்., கோராசன் மற்றும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பயனுள்ள வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். பாகிஸ்தான் -- அமெரிக்கா இடையே நீண்ட கால உறவு உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் திட்டமிட்ட பேச்சுக்கள் மிக முக்கியமானது என்பதை இரு தரப்பிலும் வலியுறுத்தினோம். உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர் வெற்றியடைந்திருப்பதை அமெரிக்கா பாராட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 50 பயங்கரவாதிகள் பலி ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், ஜோப் மாவட்டத்தில் ஆகஸ்ட் 7 முதல் 11 வரை நான்கு நாட்கள் நடந்த அந்நாட்டு ராணுவத்தின் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் தெஹ்ரிக் -- இ - -தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 14, 2025 12:15

அமெரிக்க டிரம்ப் அகராதி படி பயங்கரவாதிகள் என்றால் பயங்கரமாக வாதம் செய்பவர்கள் என பொருள். டிரம்ப் சொன்னால் வாதம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் பாகிஸ்தான் வைத்து பயங்கரமாக வாதம் செய்பவர்களை ஒடுக்கி விடுவார். பிந்தரன்வாலேயை வளர்த்த இந்திரா அவர்களாலேயே மரணித்தார். இலங்கை உள் நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்து நோபல் பரிசு வாங்க நினைத்த ராஜீவ் பொரோஸ் காந்தி அவர்களேலே மரணித்தார் இதெல்லாம் சரித்திரம். டிரம்ப்க்கும் இது பொருத்தலாம். எச்சரிக்கை


தமிழன்
ஆக 14, 2025 12:01

உருட்டு நீ உருட்டு ராஜா என்ன செய்ய அமெரிக்காவுக்கு வந்த வேண்டாத காலம்


K.n. Dhasarathan
ஆக 14, 2025 11:52

அந்த இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்க இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டதா ? அல்லது ஆயுதங்களை விற்க போடும் தந்திரமா? பாவம் பாக்கிஸ்தான்


The Mechanic
ஆக 14, 2025 10:47

அடுத்த ஆவணி 26 ற்காக பிள்ளையார் சுழி போட்டுக்கொண்டது அமெரிக்கா!!!! சிறுபிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது


சந்திரசேகர்
ஆக 14, 2025 10:38

இனி பாகிஸ்தான் தீவீரவாதிகள் அதிகமாக இந்தியாவுக்குள் ஊடுருவான்கள் அமெரிக்க ஆசியோடு


karthikeyan
ஆக 14, 2025 10:14

டேய் பாகிஸ்தான் அப்படியே அமெரிக்காவுல இன்னும் ஒரு ரெட்டை கோபுர தாக்குதல் நடத்தி வெள்ளை மாளிகையில் தலைமை காவலர் பதவி வாங்கிரு இந்த 23 ம் புலிகேசிகிட்ட ......


V RAMASWAMY
ஆக 14, 2025 09:22

வேலிக்கு ஓணான் சாட்சி.


ASIATIC RAMESH
ஆக 14, 2025 09:09

பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக பாகிஸ்தான் - அமெரிக்கா பிரதிநிதிகள் இடையே இரு தரப்பு பேச்சு .... ஹ ஹா... அநேகமாக இருவரும் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராக ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டியிருப்பார்கள்...


Nathan
ஆக 14, 2025 08:20

டாலர் ஒழிக்கப்பட்டு நாடுகள் தங்கள் சொந்த நாணயத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்துவது மட்டுமே இதுபோன்ற கேளிக்கூத்துகள் நிற்கும்.தீவரவாத நாடுகள் விடுதலை போராளிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது கேளிக்கூத்து நிச்சயம் இது மாற வேண்டும்


D Natarajan
ஆக 14, 2025 08:08

இது ஒரு திட்டமிட்ட அமெரிக்காவின் சதி பாகிஸ்தானுக்கு ஆதரவு, க்ஹலிஸ்தான் pannun ஆதரவு, பங்களாதேஷில் யூனுஸ்க்கு ஆதரவு. இந்தியா மிகவும் நிதானத்துடன் இந்த சதி செயலை கையாளவேண்டும்.


சமீபத்திய செய்தி