வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன மனுஷன்யா டிரம்பூ. வருடம் 365 நாட்களும் அக்ரிமெண்ட் போடுவதால் அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டதாக நான் யூகிக்கிறேன். முதலில் ஏதோ ஷட்டவுனை போட்டாயே ! அதை எடுத்தாயிற்றா !
சியோல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தென்கொரியாவில் பேசியபோது, இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறினார். அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு பண உதவி செய்கிறது என்ற காரணங்களை கூறி, இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 50 சதவீத வரி விதித்தார். இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இதனால் அமெரிக்கா நம் நாட்டுக்கான வரியை 50 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக ஆக குறைக்க ஒப்புக்கொண்டது என கூறப்படுகிறது. ஆனால் இரு தரப்பும் பரஸ்பர ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், அமெரி க்க அதிபர் டிரம்ப் தன் ஆ சிய பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று தென் கொரியாவுக்கு சென்றார். அங்கு ஆசியா - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் நீண்ட உரை நிகழ்த்தினார். அதில், “நான் இந் தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் மதிக்கிறேன்; நேசிக்கிறேன். எங்கள் இடையே சிறந்த உறவு உள்ளது. ' 'அவர் பார்ப்பதற்கு மென்மையானவர். ஆனால் மிகவும் கடினமான, வலுவான தலைவர்,” என்றார்.
நம் நாட்டின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் ஜவுளி, இறால் தொடர்புடைய ஏற்றுமதி நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்தன. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதனால் இறக்குமதி வரி வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியால் நேற்று ஜவுளி மற்றும் இறால் ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகள் விலை 2 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன
என்ன மனுஷன்யா டிரம்பூ. வருடம் 365 நாட்களும் அக்ரிமெண்ட் போடுவதால் அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டதாக நான் யூகிக்கிறேன். முதலில் ஏதோ ஷட்டவுனை போட்டாயே ! அதை எடுத்தாயிற்றா !