உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது; 9 பேர் பரிதாப பலி

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது; 9 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், லெவோடோபி லக்கி மலையில், இன்று (நவ.,04) எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் இலே புரா மாவட்டத்தில் துலிபாலி கிராமம், நோபோ, நுரபெலன் மற்றும் ரியாங் ரீட்டா ஆகிய 4 கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த விபத்தில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், பலர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரண்டாவது எரிமலை வெடிப்பு இதுவாகும். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் மவுண்ட் மராபி பகுதியில், அக்.,27ம் தேதி எரிமலை வெடித்தது. இதனால், அருகிலுள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் எந்த உயிரிழப்பும் அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தமிழ்வேள்
நவ 04, 2024 20:57

திருட்டு திராவிட மண்ணில் இந்த மாதிரியான நல்ல நிகழ்வுகள் நடப்பதில்லையே?....


V Venkatachalam
நவ 04, 2024 12:54

ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வளவு நவீனத்துவம் இருந்தும் எரிமலை வெடிக்கப் போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை?


P. VENKATESH RAJA
நவ 04, 2024 12:03

அய்யோ இந்தோனேசியாவில் அடிக்கடி எரிமலை வெடித்துள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை