வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகள் மலாக்கா நீரிணைப்பின் அருகே அமைந்துள்ளது, இதன் வழியேதான் உலக வர்த்தகத்தின் 95 சதவிகித கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகம் நடைபெறுகிறது.. இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிகோபார் தீவு கூட்டம் என 836 தீவுகள் உள்ளது. இப்போது சீனா முன்னெடுக்கும் தென் சீனா கடல் ஹைனன் தீவு பெரும் துறைமுக திட்டம் போன்று பிரதமர் மோடி அவர்கள் 30 அந்தமான் நிகோபார் தீவுகளை இணைத்து மலாக்கா நீரிணைப்பின் முகத்துவாரத்தில் உலகின் முதன்மையான சுமார் ருபாய் 15 லட்சம் கோடி செலவில் பெரிய அளவில் கட்டமைக்க கடந்த 2016 ல் மோடி அரசு திட்டமிட்டது. ஆனால் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதிய மற்றும் அணு குண்டு கட்டுபாட்டு மையம் அந்தமானில் உள்ள பிராந்திய ராணுவ கட்டுப்பாடுடன் ஒருங்கிணைத்து உள்ளதால் தேசிய பாதுகப்பு கருதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மலாக்கா நீரிணைப்பில் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகலில் இந்திய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மறுசீரமைக்கப்பட்டு விரைவில் இந்த துறைமுகம் கட்டுமானம் ஆரம்பிக்கப்படும். 2035 காலத்தில் இதன் கட்டுமானம் முடியும்போது உலக கப்பல் போக்குவரத்து பொருளாதாரம் இந்திய வசம் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. சீனா வுக்கும் மற்ற பணக்கார நாடுகளுக்கும் இந்திய பிரதமர் மோடி சளைத்தவர் அல்ல என்பதை நாடு மக்கள் உணரவேண்டும்.
நாங்கூட எதோ நம்ம 52 இஞ்சி தான் மக்களுக்காக நல்லது செஞ்சி வைத்து இருக்குமோ என்று ................
நானும் அதே மனநிலையில் படிக்க ஆரம்பித்தேன்... இது போன்ற தொலைநோக்குப்பார்வை இல்லையோ இந்திய அரசியல் வாதிகளிடம்...
த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்பத்தின் அடுத்த முதலீடு பயணம் அனேகமாக இங்குதான் இருக்கும் போல.
சீனா, ஹைனன் தீவை உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக துறைமுகமாக மாற்றும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருப்பது, வெறும் பொருளாதார சீர்திருத்தமாக மட்டும் பார்க்க முடியாத ஒன்று. இது, உலக அரசியல் - வர்த்தக சூழலில் சீனா எடுத்து வரும் ஆழமான, நீண்டகால மூலோபாய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும். ஒருபுறம், இறக்குமதி வரி விலக்கு, குறைந்த நிறுவன வரி, குறைந்த வருமான வரி போன்ற சலுகைகள், உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 74 சதவீத பொருட்களுக்கு வரி இல்லாத நிலை, சீனாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஹைனனை மிகப்பெரிய போட்டித் திறன் கொண்ட மையமாக மாற்றுகிறது. 'ஐபோன்' போன்ற பொருட்களின் விலை குறையும் என்பதே, சாதாரண நுகர்வோருக்கும் இத்திட்டத்தின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால், இத்திட்டத்தின் உள் நோக்கம் அதைவிட முக்கியமானது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனாவுக்கு எதிராக வர்த்தக தடைகளை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை சுற்றி வளைத்து செல்லும் “புதிய நுழைவாயில்” ஆக ஹைனன் உருவாக்கப்படுவதாகவே தெரிகிறது. வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து, இங்கே மதிப்பு கூட்டி, பின்னர் சீன பிரதான நிலப்பரப்புக்குள் வரியின்றி கொண்டு செல்லும் நடைமுறை, சீனாவுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், முழுத் தீவையே தனி சுங்க மண்டலமாக அறிவித்திருப்பது, “ஒரே நாடு - இரண்டு பொருளாதார விதிமுறைகள்” என்ற நிலையை உருவாக்குகிறது. இது முதலீட்டாளர்களுக்கு வசதியாக இருந்தாலும், சீனாவின் உள்ளக பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு அநீதியாக மாறும் அபாயமும் உள்ளது. ஹைனன் - பிற மாகாணங்கள் இடையிலான வளர்ச்சி இடைவெளி மேலும் அதிகரிக்கக் கூடும். ஜெர்மனியின் 'சீமென்ஸ் எனர்ஜி' போன்ற நிறுவனங்கள் தொடக்க நாளிலேயே கிளை தொடங்கியிருப்பது, திட்டத்தின் நம்பகத்தன்மையை காட்டினாலும், நீண்ட காலத்தில் இது உலக அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதா என்பதே முக்கிய கேள்வி. மேற்கத்திய நாடுகள், ஹைனனை ஒரு “வரி தவிர்ப்பு மையம்” அல்லது “மறைமுக வர்த்தக வழி” எனப் பார்க்கத் தொடங்கினால், புதிய தடைகள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. முடிவில், ஹைனன் திட்டம் சீனாவின் பொருளாதார துணிச்சலையும், உலக வர்த்தகத்தில் தனது இடத்தை தக்கவைக்க மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பான அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது. இது சீனாவுக்கு ஒரு வாய்ப்பு, ஆனால் அதே நேரத்தில் உலக அரசியல் - வர்த்தக சமநிலைக்கு ஒரு சவால். ஹைனன் வெறும் சுற்றுலா தீவாக இருந்து, சீனாவின் புதிய பொருளாதார கோட்டையாக மாறுமா என்பதை தீர்மானிப்பது, வருங்கால உலக அரசியல் சூழல்தான்.
உங்களின் ஆழமான சிந்தனைக்கு, வாழ்த்துக்கள்...
சிங்கப்பூர் எதையும் உலகின் பெரியதாக நினைத்துக்கொண்டு செய்யாது. சிறப்பாக செய்யவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். அகலக்கால் வைக்காமல் சிறிது சிறிதாக வளர்வது நீடித்து நிற்க உதவும். தொழில் இல்லாமல் மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்குவது சீனாவின் கோட்பாடு. அது நிலைத்து நிற்க முடியுமா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். சீனாவின் வீட்டு வசதிக்காக கண்டமேனிக்கு வீடு கட்டும் கோட்பாடு வங்கிகளை எங்கு அனுப்பியது என்பது அனைவருக்கும் புரியும். அகலக்கால் ஆபத்தானது.