உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று இரண்டாம் பிரகாரத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், 'மறுவூடல்' நிகழ்ச்சி நடந்தது. இதில் சுவாமிகள் ஆடிய காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி, ''அண்ணாமலையாருக்கு அரோகரா'' என கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

16-01-2025 | 21:58


மேலும் இன்றைய போட்டோ

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

22-05-2026 | 06:34


சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

22-05-2026 | 05:27


முன்னாள் மறைந்த பிரதமர் ராஜீவ் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை காங்., கட்சி அலுவலகத்திலிருந்து மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

22-05-2026 | 05:27


சர்தார் படேல் சாலையில் நாள்தோறும் காலை பீக் ஹவரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : மத்திய கைலாஷ், அடையாறு

21-05-2026 | 22:57


கோடை விடுமுறையொட்டி, கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

21-05-2026 | 22:49


கோவையில் பல ரோடுகள் இன்னும் இந்த நிலைமையில் தான் உள்ளது. இடம்: கோவில்மேடு.

21-05-2026 | 18:44


சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.

21-05-2026 | 18:44


விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.

21-05-2026 | 18:43


வீடு வழங்க கோரி 250 குடும்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்:கலெக்டர் அலுவலகம்,பாரிமுனை.

21-05-2026 | 18:42