இன்றைய போட்டோ
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வயல்வெளியில் சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வழியாக செல்லும் பயணியர் தங்கள் வாகனங்களை நிறுத்தி பூக்களை ரசிப்பதுடன், அவற்றுக்கு நடுவே நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர். பூந்தோட்ட உரிமையாளர் இதற்கு ஒரு குழுவிற்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கின்றனர். பூக்களை விற்றால் தான் காசு என்பது இல்லை. பூத்து நின்றாலும் காசு தான் போலும்.
22-08-2025 | 06:27
மேலும் இன்றைய போட்டோ
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடும் குளிர் நிலவுகிறது. அங்குள்ள தால் ஏரியில் படகில் செல்லும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் ஓயாமல் உழைத்த படகுகள் ஓய்வெடுக்கின்றன.
08-02-2026 | 07:36
சிவகங்கை - மேலூர் ரோடு பைபாஸ் சந்திப்பில் இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது இதில் பலர் காயமடைந்தனர்.
07-02-2026 | 17:29
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே மணல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்
07-02-2026 | 17:28
மாநில அரசு மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில், வாழை மட்டையில் இருந்து தயார் செய்த பொருட்களுடன், அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமத்தை சேர்ந்த பெண்கள்
07-02-2026 | 17:28
ஊட்டி அண்ணா கலையரங்கில், நீலகிரி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் , பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடந்தது.
07-02-2026 | 14:49
விருத்தாசலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2000 மெட்ரிக் டன் நெல்முட்டைகள் விருத்தாசலம் ரயிலில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
07-02-2026 | 14:48