இன்றைய போட்டோ
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் புதியதாக துவங்கப்பட்ட பைராபி-சாய்ராங் ரயில் பாதை, பசுமை போர்த்திய வயல்களின் நடுவே வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகளின் மேல் அமைந்துள்ளது. இந்த தடத்தில் ரயிலில் பயணிப்பது புதிய அனுபவத்தை தரும். இது மொத்தம் 8,070 கோடி ரூபாய் மதிப்பில் 51.38 கி.மீ., தூரத்துக்கு கட்டப்பட்டுள்ளது.
14-09-2025 | 08:04
மேலும் இன்றைய போட்டோ
கடந்தாண்டு நடந்த ரயில் நிலைய விபத்தில் உயிரிழிந்த 16 பேரின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க திரண்ட மக்கள். இடம்: நோவி சாட் ரயில் நிலையம், செர்பியா.
02-11-2025 | 09:05
சிறு மழை, காற்று என்று காலநிலை பிரமாதமாக இருக்கும் போது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சந்தோஷம் பிறந்து விடுகிறது. இங்கே கூண்டிற்குள் இருக்க வேண்டிய சிறுத்தைகள் வெளியே வந்து இதமான சூழலை அனுபவிக்கின்றன. இடம்: சூரத் விலங்கியல் பூங்கா, குஜராத்.
02-11-2025 | 08:48
அடுக்கடுக்காய் பசுமை போர்த்தியது போன்ற அழகுடன் கூடிய மலைகளின் ரம்மியமான காட்சி. இடம்: கோவை ஆனைகட்டி அருகே.
02-11-2025 | 08:44
டில்லி செங்கோட்டை முன், 'எனது டில்லி; எனது நாடு- ஒற்றுமையான இந்தியா, தன்னிறைவு இந்தியா' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
02-11-2025 | 08:19
தேவ உதானி ஏகாதசி என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை. இதனால் பக்தர்கள் எரிக்கரைகளிலும், கோவில்களிலும் விஷ்ணு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர். இடம்: ஜபல்பூர், மத்திய பிரதேசம்.
02-11-2025 | 08:14
பஞ்சாபின் பாட்டியாலா புறநகரில் நெல் அறுவடைக்கு பின் விவசாயி தன் வயலில் மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிக்கிறார். பயிர் கழிவு எரிப்பால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. குறிப்பாக சுவாச நோய்களுக்கு காரணமாகிறது.
02-11-2025 | 08:10