இன்றைய போட்டோ
அரும்பாடுபட்டு உழைத்ததன் விளைவாக விளைந்த நெல் மூட்டைகள் தானியக்கிடங்கின்றி மழையில் நனைவது கண்டு பொறுக்க முடியாமல், அதை தார்ப்பாய் வைத்து மூடி காப்பாற்ற துடிக்கும் விவசாயி. வானாளாவிய அதிகாரங்கள் கொண்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், விளைப்பொருட்களை காப்பாற்ற போராடும் விவசாயிகளின் கண்ணீரை எப்போது துடைப்பர்? இடம்: பட்டியாலா, பஞ்சாப்.
08-10-2025 | 08:04
மேலும் இன்றைய போட்டோ
ஐரோப்பாவில் வீசும் கடும் குளிர்காலக் காற்றினால் பால்டிக் கடலின் கடற்கரை பகுதிகள் உறைந்து பனிக்கட்டியாக மாறியுள்ள சூழலில், ஜெர்மனியின் ஷார்பியூட்ஸ் நகரில் பலத்த காற்றையும் பொருட்படுத்தாமல் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்.
04-02-2026 | 22:29
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவல்பூர் நெடுஞ்சாலை ஓரத்தில் சாலை பணிக்காக கொட்டப்பட்ட 60 ஆண்டுகள் பழமையான அரச மரம், செங்காடு ஏரிக்கரையில் மீண்டும் நடப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
04-02-2026 | 22:29
அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் உள்ள போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில், பனிமூட்டம் சூழ்ந்த ஒரு குளிர்கால காலை வேளையில் யானைகளுடன் செல்லும் பாகன்கள்.
04-02-2026 | 22:29
மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் துவங்கும் முன், வந்திருந்தவர்களுக்குக் கட்சி கரை போட்ட துண்டுகள் வழங்கப்பட்டு, பக்காவாகப் புகைப்படம் எடுக்கப்பட்டது. கோஷங்கள் அடக்கி, ஆர்ப்பாட்டம் ஒரு வழியாக முடிந்த உடன் தொண்டர்களின் தோளில் இருந்த துண்டுகள் அவசர அவசரமாக திரும்பப் பெறப்பட்டன. கேட்ட போது அடுத்த ஆர்ப்பாட்டத்துக்கு வேண்முல்ல… என்றனர். உருவிய துண்டுகளுடன் காங்கிரஸ் தொண்டர்.
04-02-2026 | 22:28
விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளைபொருட்கள் எடுக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
04-02-2026 | 21:06
கும்பாபிஷேகம் நடக்க உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் தங்க கோபுரம் இரவில் மின் ஒளி அலங்காரத்தில் ஜொலித்தது.
04-02-2026 | 21:05