இன்றைய போட்டோ
நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களுக்கான தடையை எதிர்த்து கடந்த மாதம் நடந்த இளம் தலைமுறையினர் போராட்டம், அரசு நிர்வாகம், வாரிசு அரசியல், ஊழலுக்கு எதிராக மாறியது. போராட்டத்தை கலைக்க முயன்றதால் வன்முறை ஏற்பட்டு தீக்கிரையான அரசு வாகனங்கள் குவியலாக வைக்கப்பட்டு உள்ளன. இடம்: காத்மாண்டு
11-10-2025 | 06:46
மேலும் இன்றைய போட்டோ
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
10-10-2025 | 20:32
வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் நடவு பணிக்காக நிலம் சமப்படுத்தப்பட்டுள்ளது.
10-10-2025 | 19:46
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதியில் நெல்அறுவடை பணிகள் ஜரூராக நடந்துவருகிறது.
10-10-2025 | 19:14
திருப்பூர்,காலேஜ் ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் சாலை பணியாளர் சங்கம் சார்பில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்,காது,வாய் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10-10-2025 | 18:10
திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து கவுன்சிலர் பவுல்ராஜ் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடன் வந்து தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி பேசினார்.
10-10-2025 | 18:10