இன்றைய போட்டோ
உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வாரணாசியில் உள்ள கங்கை நதி 230 அடி என்ற எச்சரிக்கை அளவை தாண்டி 231 அடியை எட்டி உள்ளது. இதனால், துணை நதிகளின் கரையோரப் பகுதிகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உபியின் கான்பூரில் உள்ள பாண்டு நதி கரைபுரண்டு ஓடியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
02-09-2026 | 22:24
மேலும் இன்றைய போட்டோ
கிருமிகள் வரக்கூடாதுன்னு பிளீச்சிங் பவுடர் போடுறது சரிதான்.. அதுக்குன்னு பயணிகள் பஸ் ஸ்டாண்ட்ல உட்கார முடியாத அளவுக்கா போடுறது! இடம்: கோவை, தீயணைப்பு நிலையம் அருகே
04-09-2026 | 15:21
திருப்பூர், பல்லடம் ரோடு ரமணாஸ் ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
04-09-2026 | 15:20
திருப்பூர், தெற்கு ரோட்டரி மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் மட்டும் சிறப்பு சுயம்வரம் நடந்தது.
04-09-2026 | 15:19
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இஸ்கான் கோவிலில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கலைப் போட்டியில், கிருஷ்ணர், ராதை, அனுமன் உள்ளிட்ட வேடங்களை அணிந்து குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
04-09-2026 | 15:19
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இஸ்கான் கோவிலில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கலைப் போட்டியில் பங்கேற்ற குட்டி ராதைகள்.
04-09-2026 | 15:19
ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு , கனடா நாட்டில் உயிரிழந்த அரவிந்த் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி , கலெக்டரிடம் மனு அளிக்க வந்த தந்தை மற்றும் உறவினர்கள்.
04-09-2026 | 15:18