நீலகிரித் தைலத்தின் மகத்துவங்களை அறிவோம்..!
யூக்லிப்டஸ் மர இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் நீலகிரி தைலம் எனப்படுகிறது. மருத்துவ குணங்கள் பல வாய்ந்த மூலிகை எண்ணெய் இது. இதன் பலன்களைத் தெரிந்துகொள்வோமா?யூகலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும் அழகு பராமரிப்புக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் இதனை தேய்த்து ஊறவித்து குளித்தால் சருமம் பொலிவுறும். சரும கொப்புளங்கள், சிறு காயங்கள், சிராய்ப்புகளை குணமாக்குவதுடன் தலைவலிக்கும் மருந்தாக இருக்கிறது. சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை உள்ளங்கையில் விட்டு முகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு சட்டென விலகும். சளியையும், தும்மலையும் தூரவிரட்டும். மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் இருக்கிறது. வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.