தமிழ் அறிவோம்; சல சல சலவென இரட்டைக்கிளவி..!
இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய் சேர்ந்து ஒரு தன்மைப்பட்டு நின்று, வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது. இரட்டைக்கிளவி பெரும்பாலும் ஓசை, ஒரு பொருளின் தன்மை, குணம் ஆகியவற்றைக் குறிப்பதால் இவை எப்படி வேண்டுமானாலும் அமைந்து இருக்க வாய்ப்புள்ளது. உதாரணம் வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ” - திருப்புகழ்இந்தப் பாட்டில் அமுது வழவழப்புத் தன்மையுடன் இருப்பது தெரிகிறது. அது கீழே விழும்போது அது கொழகொழவென பசைத் தன்மையுடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.