லிங்கத்தின் மேல் விழும் நீர் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
லிங்கத்தின் மேல் விழும் நீர் தஞ்சாவூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் திட்டை என்ற திருத்தலம் இருக்கிறது. தென்குடித் திட்டை என்று பெயர் பெற்ற இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள சிவனின் பெயர் வசிஸ்டேஷ்வரர். அம்பாளின் பெயர் உலகநாயகி. இத்தலத்தில் குருபகவானுக்கு தனி சன்னதி இருப்பது சிறப்பு. இங்கு கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தானாகவே ஒரு சொட்டு நீர் விழுந்துகொண்டிருக்கும்.
ஏப் 08, 2025