இன்று பிரதோஷ வழிபாடு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
பிரதோஷத்தன்று விரதம் இருந்து தூய்மையான மனதுடன் சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபடுவதால் சகல விதமான தோஷங்களும், பாவங்களும், துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம். தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலம் என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர். திரயோதசி திதி நாளில் கோவில்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். இந்த திதி துவங்கியதில் இருந்து அவரவர் உடல்நிலைக்கு தக்க விரதமிருந்து, சிவ நாமங்களை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஜன 27, 2025