/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ 300 ஆண்டுகளுக்கு பின் வேங்கடமங்கலம் வந்த பெருமாள்! Perumal Tample | Vengadamangalam | Unexploredchen
300 ஆண்டுகளுக்கு பின் வேங்கடமங்கலம் வந்த பெருமாள்! Perumal Tample | Vengadamangalam | Unexploredchen
பெருமாளின் அற்புத வரலாறு! சென்னை அருகே கண்டிகை - பொன்மார் இணைப்பு சாலையில் வேங்கடமங்கலம் என்ற கிராமம் உள்ளது. அங்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் கோயில் இருந்ததாக கூறப்படுகிறது. 2012ம் ஆண்டு பக்தர் ஒருவரின் கனவில் பெருமாள் தோன்றி வேங்கடமங்கலத்தில் கோயில் கட்ட வேண்டுமென கேட்டு கொண்டுள்ளார். அந்த பக்தர் ஊரின் பஞ்சாயத்து தலைவரை சந்தித்து கனவில் பெருமாள் வந்ததை கூறி உள்ளார். இதையடுத்து ஊர்மக்கள் அனைவரும் கூட்டம் போட்டு பேசினர். அப்போது 300 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில் பெருமாள் கோயில் இருந்தது தெரிய வந்தது. அதற்காக குளத்துடன் ஐந்தரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட வரலாற்றையும் மக்கள் அறிந்து கொண்டனர்.
நவ 26, 2024