ஐயப்பன்-சொல் விளக்கம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
ஐயப்பன்-சொல் விளக்கம் சபரிமலை சாஸ்தாவை ஐயப்பன் என்கிறோம். தலைவனாகிய அந்த ஐயனே நமக்கு தந்தை என்ற பொருளில் ஐயப்பன் என்ற சொல் அமைந்தது. இந்தச் சொல் பிறக்க கர்ணபரம்பரைக் கதை ஒன்றும் காரணமாக உள்ளது. ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தளமகாராஜா. அவருக்கு இன்னொரு மகனும் உண்டு. அந்த மகனுக்கு பட்டம் சூட்ட பந்தளராணி விரும்பினாள். ஐயப்பன் அதற்கு தடையாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அங்கிருந்து விரட்ட முடிவெடுத்தாள். தனக்கு தலைவலி வந்தது போலும் அதைக் குணமாக்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என்றும் சொன்னாள். ஐயப்பன் காட்டுக்குச் சென்று பல புலிகளுடன் வந்தார். இதையடுத்து அவரது தெய்வசக்தி வெளிப்பட்டது. குடும்ப வாழ்வில் இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த ஐயப்பன் காட்டிற்குச் சென்று தவத்தில் அமரப்போவதாக தந்தையிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.