பக்தர்கள் காவடியுடன் கிரிவலம்|Subramania Swamy Temple Festival
வேலூர் மாவட்டம் வள்ளி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீ ஹரிஓம் யோக நரசிம்ம ஸ்வாமி பக்தனை சேவா சங்கம் சார்பில் 31 ஆம் ஆண்டு படி உற்சவ திருவிழா நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடியுடன் கிரிவலம் வந்து மலைக்கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு காவடி மற்றும் பால் குடம் எடுத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு பாலபிஷேகம், விபூதி காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டன.
ஜன 28, 2024