கராத்தே தற்காப்புக்கலையை பாடமாக சேர்க்க வலியுறுத்தல் | Chennai | National Karate Competition
கராத்தே தற்காப்புக்கலையை பாடமாக சேர்க்க வலியுறுத்தல் | Chennai | National Karate Competition தேசிய அளவிலான ஒப்பன் காரத்தே சாம்பியன் ஷிப் போட்டி கோவாவில் கடந்த நவம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைப்பெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவண, மாணவியர்கள் களமிறங்கினர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணமாலை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 18 கராத்தே வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். 45 பிரிவுகளில் நடந்த போட்டியில் 18 மாணவர்கள் 9 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலம் என 11 என 36 பதக்கங்களை வென்றனர். இதில் திருவண்ணாமலை அரசு பள்ளியை சேர்ந்த மதுவினி தங்கம் , ஹரினி, சோமேஷ்ராஜ் இருவரும் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். சென்னை திரும்பிய மாணவர்களுக்கு ஹகுரியு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் தலைவர் பிரபாகரன், நிர்வாகி நாகராஜன் சால்வை அணிவித்து வரவேற்றனர்.