உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி | Surplus water that mixes with thg ocean| High Court | TN

தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி | Surplus water that mixes with thg ocean| High Court | TN

தமிழகத்தில் பருவமழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் விதமாக சென்னையில் உள்ள ஏரிகளை சீரமைக்கக்கோரி ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ்பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுதும் மழைக்காலங்களில் வீணாகும் நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கு ஏன் திருப்பி விடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உபரி நீரை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் நீர்வள ஆதாரத்துக்கு என தனித்துறை உள்ளது. உபரி நீரை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். ஏரி, குளங்களுக்கு மழைநீரை திருப்பி விடுவதன் வாயிலாக நிலத்தடி நீர் மட்டம் உயரும். நீர்வள ஆதாரத்துறை ஏற்படுத்தப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், மழைக்காலத்தில் வீணாக கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் திட்டம் மற்றும் உபரிநீர் வீணாகாத வகையில் உறுதி செய்யவும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ