கூடைப்பந்து விளையாட்டில் சாதிக்கும் கோவை மாணவன்...
கோவை நேரு விளையாட்டு அரங்கில் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அன்னுார் கரியாம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீ ரித்திக் என்ற சிறுவன் தங்கியிருந்து கூடைப்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். கோவையில் விடுதி செயல்பட்டு வருவது பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு தெரிவதில்லை. இது போன்று கிராமப்புற மாணவர்கள் பலர் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்றால் இன்னும் பல மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள் என்பது குறித்து வலியுறுத்துவதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
நவ 12, 2024