பறவைக் காய்ச்சல் பரவல்... கோவையில் அச்சம் வேண்டாம்
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காகங்கள் திடீரென்று இறந்தன. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை உஷார் படுத்தப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் கால்நடைத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை கோழிகளோ அல்லது பறவைகளோ சந்தேகப்படும் வகையில் இறக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பறவைக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 09, 2026