காலநிலை மாற்றத்தை கரெக்டா சொல்லும் பட்டாம்பூச்சிகள்
தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மகரந்த சேர்க்கை நடப்பதில் பட்டாம் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது மனிதர்களுக்கு பலவிதமான பலன்களை அளிக்கின்றன. தற்போது காலநிலை மாற்றத்தால் மழை மற்றும் வெயில் காலம் மாறி வருகிறது. ஆனால் எப்போது மழை பெய்யும், எப்போது வெயில் இருக்கும் என்று பட்டாம்பூச்சிகள் எங்களுக்கு சொல்லி விடும் என்கிறார் ஆராய்ச்சியாளர் பெலிக்ஸ் நிர்மல் தேவ். தாவரங்களை தேர்ந்தெடுத்து இடம் பெயரும் பட்டாம்பூச்சிகளை பற்றிய ஆச்சரியமான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 05, 2024