விவசாயிகள் மகிழ்ச்சி | Amaravathi Dam is full
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதால் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணை நீர் மட்டம் மளமளவென உயர்ந்து முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3,532 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3,000 கன அடியாகவும் உள்ளது. அணை நிரம்பி விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது.
ஜன 09, 2024