/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பஸ் ஸ்டாப்பில் பிரச்னையா? பெண்களுக்கு உதவும் எமர்ஜென்சி காலிங் பூத்...
பஸ் ஸ்டாப்பில் பிரச்னையா? பெண்களுக்கு உதவும் எமர்ஜென்சி காலிங் பூத்...
கோவை மாநகர மக்களின் பாதுகாப்புக்காக சகோ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகரில் உள்ள 130 பஸ் ஸ்டாப்புகளில் ஒரு கண்காணிப்பு கேமரா நிறுவப்படும். அதன் கீழ் ஸ்பீக்கிங் பாக்ஸ் இருக்கும். பஸ் நிறுத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அங்குள்ள பொத்தானை அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உடனடியாக அங்கு செல்வார்கள். இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 27, 2025