காலிறுதியில் போராடிய வீராங்கனைகள் | sports | Kovai
கோவை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட மண்டலங்களுக்கு இடையே மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் இந்துஸ்தான் இன்ஜினீயரிங் கல்லுாரியில் துவங்கியது. இதில் 11 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை அண்ணா பல்கலை விளையாட்டு வாரிய தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இந்துஸ்தான் கல்லுாரி முதல்வர் ஜெயா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். முதல் காலிறுதியில் சென்னை ஜே.பி.ஆர்., அணி, 32-20 என்ற புள்ளி கணக்கில் கோவை ஈஸ்வர் இன்ஜினீயரிங் கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து சென்னை புனித ஜோசப் கல்லுாரி அணியும், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை அணியும் மோதியது. இதில் 59-57 என்ற புள்ளிகளில் புனித ஜோசப் கல்லுாரி அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., அணியும், கொங்கு இன்ஜினீயரிங் கல்லுாரி அணியும் மோதிய போட்டியில் 56-41 என்ற புள்ளி கணக்கில் பி.எஸ்.என்.ஏ., அணி வெற்றி பெற்றது. நான்காம் காலிறுதியில் கோவை கே.பி.ஆர்., அணி, 28-11 என்ற புள்ளி கணக்கில் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் திருச்சி அணியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.