தினமலர் செய்தி எதிரொலி! சிதிலமடைந்த சிறுபாலம் சீரானது!
கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில், மதுக்கரையில் மரப்பாலம் என்கிற இடத்தில் குறுகிய ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. சுரங்கப்பாதையின் ஒருபுறம் உள்ள மக்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என பல்வேறு காரணமாக மறுபுறம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அதற்கான பாதை சரிவர இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டார்கள். அந்த சாலை குண்டும், குழியுமாக சேறும், சகதியுமான சாலையாக இருந்தது. இதுபற்றி தினமலர் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது தினமலர் செய்தியின் எதிரொலியாக அந்தப் பாதை சரி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூலை 10, 2025