புரட்டாசியில் திறக்கப்படும் பெருமாள் முடி கோவில்
கோவை மாவட்டம் மாங்கரை அருகே சேம்புகரை பெருமாள் முடி மலைக் கோவில் உள்ளது. இந்த கோவில் மலையில் இருப்பதால் சாதாரண நாட்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அந்த நாட்களில் மட்டும் திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். சேம்புகரை பெருமாள் முடி மலைக்கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 07, 2025