/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையில் வாகன பெருக்கம்... சாலையில் நெருக்கம்... காரணம் என்ன? Coimbatore
கோவையில் வாகன பெருக்கம்... சாலையில் நெருக்கம்... காரணம் என்ன? Coimbatore
கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் சாலைகள் மட்டும் அப்படியே தான் இருக்கிறது. கோவை ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை, திருச்சி சாலை. சரவணம்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் மெல்ல தான் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு காரணம் வாகனங்கள் பெருக்கம் மட்டுமில்லை. நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதாலும். பல்வேறு இடங்களில் பாலம் வேலைகள் நடப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பீக் அவர்சில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினாலும் நெரிசல் தீர்ந்தபாடில்லை. போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 06, 2024