சாக்கடை சுத்தம் செய்யல... கொசுத் தொல்லை தாங்கல...
கோவையில் உக்கடம் பகுதி அரிசி கடை வீதியில், சாக்கடைகள் பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் கொசு தொல்லையால் டெங்கு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மழை காலங்களில் சாக்கடை தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன என்றும், அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாக்கடை பிரச்னையினால் பொது மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 21, 2024