U turn வேண்டாம்... சிக்னல் வேண்டும்...
கோவை அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இன்னும் யு டேர்ன் முறை தான் அமலில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட துாரம் சென்று திரும்பி வர வேண்டியுள்ளது. பீளமேடு பகுதியில் விளாங்குறிச்சி சாலை மற்றும் பயோனிர் மில் சாலைகள் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாக மாறியுள்ளன. இதனால் பொது மக்கள் அவதிப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 08, 2026