என்ன நடக்கும்னு தெரியல... உயிரை கைல புடிச்சுட்டு இருக்கோம்...
கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதற்கு அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அதில் இரவு நேரங்களில் சிலர் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் அந்த கிணறு அருகில் கட்டப்பட்டுள்ள சில வீடுகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மரண பீதியில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகளின் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விவரிக்கிறது.
ஜூன் 10, 2026