உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / நால்வர் கைது; 15 பவுன் மீட்பு | Robber brandishing a knife | 4 accused arrested | Dindigul

நால்வர் கைது; 15 பவுன் மீட்பு | Robber brandishing a knife | 4 accused arrested | Dindigul

திண்டுக்கல் ஓடைப்பட்டி, ரங்கநாதபுரம், கரட்டு மேடு உள்ளிட்ட பகுதிகளில் காதல் ஜோடிகள் தனிமையில் சந்தித்து மணிக்கணக்கில் கடலை போடுவது வழக்கம். நீண்ட நாட்களாக இவர்களை கவனித்த கொள்ளை கும்பல்கள் காதல் ஜோடிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி வழிப்பறி செய்து வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தாலுகா மற்றும் தாடிக்கொம்பு போலீசாரிடம் புகார் அளித்தனர். கொள்ளையர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ., அருண் நாராயணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். இ.பி. காலனியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாருக்கு குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். இவ்வழக்கில் பொன்னகரம் பிரேம்குமார், ரங்கநாதபுரம் செந்தூர் பாண்டி, மாலப்பட்டி சிவசக்தி மற்றும் ரவுண்ட் ரோடு ஷேக் பரீத் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வீட்டில் உருக்கிய நிலையில் இருந்த பதினைந்தரை பவுன் நகைகை பறிமுதல் செய்தனர். வழிப்பறி கொள்ளையர்கள் கைதானதையடுத்து காதல் ஜோடிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி