உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / கழுகு பார்வையில் வெள்ளை யானை ஓடும் ஏசல் நிகழ்ச்சியின் பரவச காட்சி

கழுகு பார்வையில் வெள்ளை யானை ஓடும் ஏசல் நிகழ்ச்சியின் பரவச காட்சி

கழுகு பார்வையில் வெள்ளை யானை ஓடும் ஏசல் நிகழ்ச்சியின் பரவச காட்சி | kanchipuram | kamatchi temple | Eagle View காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 3ம் நாள் உற்சவத்தில் இரவு ஆரஞ்சு நிற பட்டுத்தி திருவாபரணங்களுடன் செண்பகப்பூ, மல்லிகை பூ மாலை சூடி காமாட்சி அம்மன் வெள்ளை நிற யானை வாகனத்தில் எழுந்தருளினார். மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க நகரின் நான்கு ராஜ வீதிகளில் யானை மீது உலா வந்தார். சங்கரமடம் அருகே முன்னும் பின்னும் வேகமாக யானை ஓடுவது போல் யானை வாகனத்தில் காமாட்சி அம்மன் ஓடிச்செல்லும் ஏசல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். கழுகு பார்வை காட்சியில் வான வேடிக்கையும், ஏசல் நிகழ்ச்சியும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !