/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மழை வேண்டி பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு Special worship for rain Vellalur Melur
மழை வேண்டி பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு Special worship for rain Vellalur Melur
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் மந்தை கருப்பண்ணசுவாமி கோயில் சித்திரை முளைப்பாரி திருவிழா கடந்த 23ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்கள் வீட்டில் நேர்த்திகடனாக வளர்த்த முளைப்பாரியை பெண் பக்தர்கள் மந்தை கருப்பணசாமி மற்றும் கற்பக விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து மழை வேண்டி, விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு செய்தனர்.
மே 03, 2024