பெற்றோரை இழந்த ஆறு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி | Pongal Festival
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் மனித சமூக விழிப்புணர்வு அமைப்பு, வசந்தோதயா அறக்கட்டளை, தும்பைபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக தியாகி கக்கன் மணி மண்டபத்தில் அவரது சிலை முன்பாக பொங்கல் பானை, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்தனர்.
ஜன 11, 2024