ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு| koil festival
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலை அடுத்த கருவாழ குறிச்சியில் பழமையான காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. குழந்தை வரம் தரும் சிறப்பு பெற்ற இக்கோயிலில் கும்பாபிஷேக சத சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்திற்கு உண்டான 108 பொருட்கள் மற்றும் வரிசை பொருட்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கன்னிப் பெண்களுக்கான கன்னியா பூஜையும் ஆண்களுக்கான வடுக பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஜூன் 29, 2024