/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பந்தலூர் அருகே எருமாடு-கொத்தலக்குண்டு ரோட்டில் புதிய பாலம் | Nilgiris | Bridge construction
பந்தலூர் அருகே எருமாடு-கொத்தலக்குண்டு ரோட்டில் புதிய பாலம் | Nilgiris | Bridge construction
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு ஊராட்சியில் உள்ள எருமாடு-கொத்தலக்குண்டு ரோட்டில் புதிய பாலம் கட்ட 2.48 கோடியை ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ் தலைமையில் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி பணியை துவங்கி வைத்தார். கவுன்சிலர்கள் யசோதா, கோபால் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பாலம் கட்டுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிப் 09, 2024