/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ வடமாநில தொழிலாளர் மூவர் கைது | 2 Tigers and wild boar were killed by giving poisoned food |Pandalur
வடமாநில தொழிலாளர் மூவர் கைது | 2 Tigers and wild boar were killed by giving poisoned food |Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சசக்ஸ் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 20ம் தேதி சாலையோரம் இரண்டு வயது ஆண் புலி மற்றும் 9 வயது பெண் புலி இறந்து கிடந்தது. தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது புலிகள் இறந்து கிடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் காட்டுப்பன்றி ஒன்று உயரிழந்து கிடந்தது. பன்றியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அதன் இரைப்பையில் மரவள்ளிக் கிழங்கு மற்றும் அரிசி ஆகியவற்றில் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பது உறுதியானது.
ஆக 24, 2024