அறநிலைய ஊழியர் சிலரால் கோரத்தாண்டவம் ஆடும் லஞ்சம்|Angalammantemple|Devotees struggle|Melamalayanoor
அறநிலைய ஊழியர் சிலரால் கோரத்தாண்டவம் ஆடும் லஞ்சம் / Angalamman temple / Devotees struggle / Melamalayanoor மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் விடுமுறை நாட்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நூறு ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும் பொது தரிசன முறையில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அறநிலைய ஊழியர்கள் ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களை குறுக்கு வழியில் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பல மணி நேரம் லைனில் நிற்கும் பக்தர்கள் கைகுழைந்தைகளுடன் கடும் அவதிக்கு உள்ளாகினர். பணம் வாங்கி கோயில் புனிதம் கெடுக்கும் கோயில் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ய அறநிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.