/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ தமிழகத்தை புதுச்சேரி அரசு பின்பற்றுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு | pongal sugarcane | Puducherry
தமிழகத்தை புதுச்சேரி அரசு பின்பற்றுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு | pongal sugarcane | Puducherry
காரைக்கால் மாவட்டம் சேத்தூரில் ஏராளமான விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இப்போது கரும்பு அறுவடைக்கு தயார் ஆகிவிட்டது. ஆனால் எந்த வியாபாரிகளும் வாங்க முன்வரவில்லை. கடந்த ஆண்டும் கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இந்த முறையும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. தமிழகத்தில் அரசே விவசாயிகளிடம் பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இதே போல் புதுச்சேரி அரசும் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜன 03, 2024