பிரதமர் மோடி ஏப்ரல் 5ம் தேதி இலங்கை செல்ல உள்ள நிலையில் கடற்படை அட்டகாசம்
டிஸ்க்: பிரதமர் மோடி ஏப்ரல் 5ம் தேதி இலங்கை செல்ல உள்ள நிலையில் கடற்படை அட்டகாசம் / Ramanathapuram / 11 Tamil fishermen arrested / Sri Lankan Navy atrocities ராமேஸ்வரம் மீனவர்கள் உரிய அனுமதி சீட்டு பெற்று நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 11 மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் ஒரு விசைப்படகு மற்றும் மீன்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் துறை முகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். அங்கு இருநாடுகளும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தினர்.