உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ஆத்தூர் அருகே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்எல்ஏ ஜெய்சங்கரன் ஆய்வு

ஆத்தூர் அருகே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எம்எல்ஏ ஜெய்சங்கரன் ஆய்வு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட என்வி நகர் பகுதியில் வசிஷ்ட நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. பாதுகாப்பு கருதி இப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஆத்தூர் அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கரன் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அவரிடம் பொதுமக்கள் கூறுகையில், பெருவெள்ளம் வருவதால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்து விடுகிறது.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ